இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டின் முதலாவது இனிங்சில் 278 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளது இந்திய அணி.
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையலான முதலாவது டெஸ்ட் போட்டி நோட்டிங்ஹோமில் நடைபெற்று வருகிறது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில துடுப்பெடுத்தாடியது.
இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாது தடுமாறிய இங்கிலாந்து அணி 65.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களை மட்டும் பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் அணித்தலைவர் ஜோ ரூட்-64, பெய்ற்சோவ்-29, கிரௌவ்லி-27, கர்ரன்-237 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
பந்துவீச்சில் பும்ரா-4, சமி-3, தாகூர்-2, சிராஜ்-1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு தனது முதலாவது இனிங்சை விளையாடிய இந்திய அணி சற்று முன்னதாக 84.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 278 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல்-84, ரவீந்திர ஜடேஜா-56, ரோஹித் சர்மா-36, பும்ரா-28, ரிசப் பந்த்-25 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
பந்து வீச்சில் ஒல்லி ரொபின்சன்-5, ஜேம்ஸ் ஆன்டர்சன்-4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
95 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது 2வது இனிங்சுக்காக விளையாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னதாக 5 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 6 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போட்டியின் இன்றைய 3வது நாள் ஆட்டத்தில் இன்னும் 52 ஓவர்கள் வீசப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா