Friday 19th of April 2024 12:51:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
கங்கை நதி பெருக்கெடுத்ததால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு!

கங்கை நதி பெருக்கெடுத்ததால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு!


உலகின் மிகப் பெரிய நதிகளில் ஒன்றான இந்தியா- உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கங்கை நதி பெருக்கெடுத்து ஓடுவதால் மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கங்கை நிதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

உத்திரப்பிரதேசம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள கங்கை, யமுனை நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்கிறது.

சில இடங்களில் கரைகளுக்கு அருகே உள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் சோட்டா பகதா, தரகானே ஜுன்ஜு ஆகிய பகுதிகளில் சுமார் 5 அடி அளவுக்கு வெள்ளநீர் பெருக்கெடுத்து வீடுகள் மூழ்கியுள்ளன.

கங்கை, யமுனை நதிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் நதிக்கரைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரை பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE