இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்சில் விளையாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லோட்ஸில் நேற்று முன் தினம் ஆரம்பமாகியது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
இiதாயடுத்து முதல் இனிங்சுக்காக விளையாடிய இந்திய அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 276 ஓட்டங்களை பெற்றிருந்தது.ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி சதமடித்த கே.எல்.ராகுல் 127 ஓட்டங்களுடனும், ரஹாணே ஒரு ஓட்டத்துடனும் இன்றைய 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
நேற்றைய நாள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்த கே.எல். ராகுல் இன்றைய ஆட்டத்தின் முதல் இரு பந்துகளை எதிர்கொண்டு மேலதிகமாக 2 ஓட்டங்கைள மட்டுமே பெற்று 129 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே (91.1) ரஹாணேவும் மேலதிக ஓட்டமெதனையும் பெறாது ஒரு ஓட்டத்துடனேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரிசப் பந்த் மற்றும் ஜடேயா ஆகியோர் ஓரளவு நிலைத்து நின்று விளையாடி முறையே 37, 40 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.
அடுத்து வந்த முகமட் சமி-0, இஷாந்த் சர்மா-08, பும்ரா-0 அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து இந்திய அணி 126.1 ஓவர்களில் 364 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தது.
பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்களையும், ஒல்லி ரொபின்சன், மார்க் வூட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், மொயின் அலி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன்னர் வரை 26 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 42 ஓட்டங்களைப் பெற்று விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோய் பேர்ன்ஸ் 23, ஜோ ரூட் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியின் மொகமட் சிராஜ் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா