Wednesday 24th of April 2024 04:19:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
விசுவமடுவில் விறகுவெட்டச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்!

விசுவமடுவில் விறகுவெட்டச் சென்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை பரிதாப மரணம்!


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட றெட்பானா சந்திக்கு அண்மித்த பகுதியில் விறகுவெட்டச் சென்றவர் இரத்தக்காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

விறகுவெட்டச் சென்ற நிலையில் அவரைத் தேடிச் சென்றபோது மரக்குற்றி ஒன்றுடன் அவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

மரக் குற்றியைத் தூக்கிச் சென்றபோது கால் தடுமாறி வீழ்ந்து குற்றி அவரின் மேல் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றபோதிலும் மரணத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை என்று அங்கிருந்து அருவியின் விசுவடு பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உயிரிழந்தவர் வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த 02 பெண் பிள்ளைகளின் தந்தையாரான செனவிரத்ன சமரக்கோன் என்று தெரியவந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE