Saturday 20th of April 2024 06:04:17 AM GMT

LANGUAGE - TAMIL
.
உளுந்து செய்கையில் மஞ்சள் நோயின் தாக்கம் அதிகரிப்பு; மாந்தை கிழக்கு, துணுக்காய் விவசாயிகள் பாதிப்பு!

உளுந்து செய்கையில் மஞ்சள் நோயின் தாக்கம் அதிகரிப்பு; மாந்தை கிழக்கு, துணுக்காய் விவசாயிகள் பாதிப்பு!


முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள உளுந்து செய்கையில் மஞ்சள் நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாக விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் இவ்வாண்டு சிறுதானிய செய்கையில் உழுந்து செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கும் உளுந்து செய்கையில் கூடுதலான பிரதேசங்களில் மஞ்சள் நோயின் தாக்கம் அதிகளவில் காணப்படுவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் இந்த உளுந்து செய்கையானது கடந்த காலங்களில் வெற்றி அழித்திருக்கும் போதும் இம்முறை ஒரு பங்கஸ் நோய் தாக்கத்தின் காரணமாக இந்த உளுந்து செய்கையிலே பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE