இந்தியாவைச் சேர்ந்த ஜைடஸ் கேடில்லா (Zydus Cadila) நிறுவனம் உருவாக்கிய ஜைகோவ்-டி (ZyCoV-D) ஊசியில்லாத 3 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ((CDSCO) அனுமதி வழங்கியுள்ளது.
நிபுணர் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து நேற்றிரவு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ள இரண்டாவது தடுப்பு மருந்தாக இது அமைந்துள்ளது.
இந்த தடுப்பு மருந்தை 12 முதல் 17 வயதினருக்கும் செலுத்தலாம். ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களை கொண்டது. முதல் டோஸ் எடுத்துக் கொண்டபின் 28வது நாளில் 2ஆவது டோசும், 56ஆவது நாளில் 3வது டோசும் செலுத்த வேண்டும்.
இந்தத் தடுப்பு மருந்து ஏனையவற்றைப் போன்று ஊசி மூலம் செலுத்தப்படாது. தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் இந்த மருந்து செலுத்தப்படும்.
இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி, மொடர்னா, ஜோன்சன் & ஜோன்சன் ஆகிய 5 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆறாவதாக ஜைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்த ஜைகோவ்-டி தடுப்பு மருந்துக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா