Friday 19th of April 2024 06:06:30 PM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில் மூத்த பிரஜைகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!

மன்னாரில் மூத்த பிரஜைகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!


ஜனாதிபதியினால் இவ் வாரம் தேசிய தடுப்பூசி வாரமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் நீண்ட கால சுகயீனமுற்ற முதியவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட மூத்த பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(26) வியாழக்கிழமை மன்னார் மாவட்டம் முழுவதும் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை இணைந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் நகர்,முசலி,நானாட்டான்,மடு,மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் முற்பதிவு மேற்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு அஸ்ராசெனிக்கா தடுப்பூசிகளின் முதல் தடுப்பூசி இன்றைய தினம் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இவ்வாரம் முழுவதும் மூத்த பிரஜைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE