Friday 19th of April 2024 09:20:23 AM GMT

LANGUAGE - TAMIL
.
3வது டெஸ்ட்; ஜோ ரூட் அபார சதம் - இங்கிலாந்து 423/8!

3வது டெஸ்ட்; ஜோ ரூட் அபார சதம் - இங்கிலாந்து 423/8!


இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இனிங்ஸில் ஜோ ரூட் அபார சதமடிக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 423 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

லீட்சில் நேற்று முன்தினம் ஆரம்பமாகி இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

இதையடுத்து முதலாவது இனிங்சுக்காக துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில் முதலாவது நாளில் சிறப்பான இணைப்பாட்டத்தினை ஏற்படுத்தியிருந்த ரோரி பேர்ன்ஸ் - ஹசீப் ஹமீத் இணையை மொகமட் சமி பிரித்தார்.

விக்கெட் இழந்த போதிலும் இங்கிலாந்து வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஓட்ட எண்ணிக்கையும் சீராக உயர்வடைந்தது.

159 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் (ரோரி பேர்ன்ஸ் - 61, ஹசீப் ஹமீத் - 68) ஆட்டமிழந்திருந்தனர்.

இதையடுத்து டேவிட் மாலனுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் ஜோ ரூட் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

சிறப்பாக விளையாடி ஜோ ரூட் சதமடித்தார். இந்நிலையில் மாலன் 70 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

சதமடித்த ஜோ ரூட் 121 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் நேரடியாக ஆட்டமிழந்தார்.

நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 423 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது இங்கிலாந்து அணி.

பந்து வீச்சில் முகமது சமி -3 விக்கெட்களையும், சிராஜ மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்ளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இங்கிலாந்து அணி இதுவரை இந்திய அணியை விட 345 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE