Tuesday 23rd of April 2024 02:20:02 AM GMT

LANGUAGE - TAMIL
.
காபூல் விமான நிலையம் மீது மேலும் தாக்குதல்கள் தொடரலாம் என எச்சரிக்கை!

காபூல் விமான நிலையம் மீது மேலும் தாக்குதல்கள் தொடரலாம் என எச்சரிக்கை!


காபூல் விமான நிலையத்தை இலக்குவைத்து பயங்கரவாதிகள் மேலும் தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

காபூல் விமான நிலையத்தை இலக்குவைத்து வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 13 அமெரிக்கப் படையினர் உட்பட 170 பேர் கொல்லப்பட்ட நிலையில், மேலும் இவ்வாறான தாக்குதல்கள் தொடரலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதற்கு விதிக்கப்பட்ட கெடு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளவர்களை பாதுகாப்பாக மீட்டு வெளியேற்றும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது காபூல் விமான நிலையம் மட்டுமே அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்தப் பகுதியை தீவிரவாதிகள் தொடர்ந்து இலக்கு வைக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேட்டோ கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாடுகள் பல ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு படைகளை முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளன.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்காவும் விரைவாக மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டு அடுத்த சில நாட்களில் முழுமையாக வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.


Category: உலகம், புதிது
Tags: அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE