முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு வள்ளுவர் புரத்தினைச் சேர்ந்த பெண் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த நிலையில் குடும்பத்தார் மரணச் சடங்கினை முன்னெடுக்க மேற்கொண்ட முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த சடலத்தை சுகாதாரத் தரப்பினர் மீளப் பெற்றுச் சென்றதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
குறித்த பெண் உயிரிழந்த நிலையில் பல நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்தது.
நேற்றை நாள் குறித்த பெண்ணுக்கு தொற்று இல்லை என்று வைத்தியசாலை நிர்வாகம் குடும்பத்தாரிடம் சடலத்தை கையளித்திருந்தது.இதனை அடுத்து இன்று முற்பகல் அவருக்குரிய இறுதிச் சடங்கினை மேற்கொள்வதற்கான ஏற்பாட்டினை குடும்பத்தார் மேற்கொண்டிருந்தனர்.
இருந்தபோதிலும் கடந்த இரவு (29) வெளியாகிய யாழ்.போதனா வைத்தியசாலையின் பிசிஆர் அறிக்கையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
சம்பவத்தை அடுத்து இந்த விடயம் குறித்து கிராம மக்கள் மிகுந்த அச்சமும் கவலையும் அடைந்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை சுகாதாரத் தரப்பினர் சடலத்தை மீளப் பெறச் சென்றிருக்கின்றனர்.
இதன்போது குடும்பத்தார் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் பின்னர் பொலிஸாரின் துணையுடன் சடலம் அங்கிருந்து மீளப் பொறுப்பேற்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு