நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுப் பகுதியில் அதிகாலை 2:52 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி இருந்தது.
நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். பல இடங்களில் வீதிகளில் பிளவு ஏற்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து