நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலுவை சிக்கல்கள் தொடர்ந்து வரும் நிலையில் 'நாய் சேகர்' தலைப்பு புதிய சிக்கலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் தடை காரணமாக கடந்த சில வருடங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார் வடிவேலு.
தற்போது அந்த சிக்கலும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட்டு மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து வடிவேலுவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் மீண்டும் திரையுலக பிரவேசம் செய்யும் முதல் படத்தின் தலைப்பு வடிவில் வடிவேலுவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு 'நாய் சேகர்' என தலைப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நகைச்சுவை நடிகர் சதிஷ் மற்றும் குக்வித் கோமாளி பவித்ரா நடிப்பில் புதிய படம் உருவாகி உள்ளது. அந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்க உள்ளார். அந்தப் படத்திற்கும் நாய் சேகர் என்று தான் தலைப்பு வைத்துள்ளார்களாம்.
படப்பிடிப்பை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிடும் போது படத்தின் தலைப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் வடிவேலு தன்னுடைய அடுத்த படம் நாய்சேகர் என்று வடிவேலு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாய் சேகர் என்ற தலைப்பை அந்த நிறுவனம் பதிவு செய்திருக்கின்றனர். எனவே வடிவேலு, அந்தப் பெயரை என் படத்துக்காக விட்டுக்கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
ஆனால், அந்தப் படத்தின் கதைப்படி தலைப்பு மிக முக்கியமாக இருப்பதால் மறுத்து விட்டார்களாம். படத்தில் ஒரு நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் இருப்பதால் படத்தின் தலைப்பு அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
விரைவில் இந்த சிக்கல் தீர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் விடாது கருப்பு என்பது போல வடிவேலுவை பிரச்சினைகளும் விடுவதாக இல்லை என்பதாக அவரது ரசிகர்களது ஆதங்கம் காணப்படுகின்றது.