சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.
அயர்லாந்து அணியுடன் நேற்று இடம்பெற்ற உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் இரண்டு கோல்களை ரொனால்டோ அடித்தார்.இவை அவருக்கு 110 மற்றும் 111-ஆவது கோல்களாக அமைந்தன.
1993 முதல் 2006 வரை ஈரானுக்காக விளையாடிய அல் டாய் 109 சர்வதேச கோல்களை அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இந்நிநிலையில் இந்தச் சாதனையை 36 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார்.
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உலக சாதனையை முறியடித்தது மட்டுமன்றி, அணிக்காக இரண்டு கோல்களைப் பெற்றுக்கொடுத்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என போட்டி முடிவில் ரொனால்டோ கூறினார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்