Wednesday 24th of April 2024 11:50:51 PM GMT

LANGUAGE - TAMIL
-
கனடாவில் கொரோனா தொற்றாளர்  தொகை 15 இலட்சத்தைக் கடந்தது!

கனடாவில் கொரோனா தொற்றாளர் தொகை 15 இலட்சத்தைக் கடந்தது!


கனடாவில் கொரோனா ரைவஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இன்று வரையான தரவுகளின் பிரகாரம் நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 1,503,035 ஆக பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 1,443,814 பேர் குணமடைந்துள்ளனர். 26,962 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 31,997 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1.4 கோடி மக்கள் தொகை கொண்ட ஒண்டாரியோ மாகாணத்தில் இதுவரை 5 இலட்சத்து 66 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,516 பேர் உயிரிழந்துள்ளனர் .

ஒன்ராறியோவில் நேற்று 656 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், 13 கொரோனா மரணங்கள் பதிவாகின.

கியூபெக் மாகாணத்தில் 690 புதிய தொற்று நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டதுடன், இரண்டு மரணங்களும் அறிக்கையிடப்பட்டன.

அத்துடன், அல்பர்ட்டா 1,315 தொற்று நோயாளர்களும் பிரிட்டிஷ்கொலம்பியாவில் 785 புதிய தொற்றாளர்களும் உறுதிப்படுத்தப்பட்டனர். ஏனைய மாகாணங்களில் இரட்டை இலக்க தொற்று நோயாளர்களே பதிவாகினர்.


Category: உலகம், புதிது
Tags: கனடா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE