தண்ணிமுறிப்பு பகுதியில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு தொடர்பில் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த இடத்திற்குச் சென்று ஆராய்ந்தார்.
கரைதுறைப்பற்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் மக்கள் யுத்த சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் குடியமர்ந்தனர். இந்த மக்கள் தற்போது தமது காணிகளுக்குச் சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு. வனவளத்திணைக்களத்தினர் தடை விதித்து வருகின்றனர் தம்மில் பலருக்கு வேறு விவசாயக் காணிகள் இல்லை எனவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்திற்கு இன்று களவிஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நிலமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பாக தொலைபேசியூடாக கலந்துரையாடினார்.
இங்கு 45 பேருக்குச் சொந்தமான சுமார் 170 ஏக்கர் காணியில் விவசாசம் செய்வதற்கும் குடியமர்வதற்கும். வனவளத்திணைக்களம் தடையாக உள்ளதாகவும் இப்பகுதியில் நெல் களஞ்சியசாலை தாம் முன்பிருந்த வீடுகளின் எச்சங்கள் தற்போதும் உள்ளதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர் .
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு