சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகளின் முதலாவது தொகுதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான விசேட சரக்கு விமானத்தில் இன்று ஞாயிறு அதிகாலை குறித்த தடுப்பூசி கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
16,192 கிலோகிராம் நிறை கொண்ட 42 பெட்டிகள் இவ்வாறு முதல் தொகுதியாக கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் இரண்டாவது தொகுதி நாளை நாட்டுக்கு கிடைக்கப்பெறவுள்ளது.
இலங்கையினால் இதுவரையில் 22 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் இதற்கு முன்னர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா