ஏராளமான ஆப்கானிஸ்தானியர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லும் நோக்கில் டோர்காம் எல்லையில் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
ஏராளமான லொறிகள் மற்றும் கொள்கலன் லொறிகள் மூலம் வந்து அவர்கள் இங்கு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் படையினர் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான் போராளிகளும் எல்லைகளில் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களால் கைப்பற்றப்பட்டதை அடுத்து கடந்த 20 வருடங்குக்கு மேலாக நிலைகொண்டிருந்த அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி அங்கிருந்து முழுமையாக வெளியேறின. அத்துடன், மீட்புப் பணிகளும் முழுமையாக முடிவுக்கு வந்தன.
இந்நிலையிலேயே அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக நாட்டை விட்டு வெளியேற ஏராளமாக ஆப்கானிஸ்தான் மக்கள் எல்லையில் காத்திருக்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் சென்று அங்கிருந்து மேற்கு நாடுகளுக்கு பயணம் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருபடபதாகத் தெரியவருகிறது.