அமெரிக்காவில் சன் டியாகோ அருகே கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஹெலிகப்டர் விபத்தில் சிக்கி காணாமால் போன கடற்படையைச் சேர்ந்த 5 மாலுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா விமானம் தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ். ஆபிரஹாம் லிங்கன் கப்பலுக்குச் சொந்தமான MH-60S என்ற ஹெலிகப்டர் கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியில் பசிபிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இயந்திரக் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 5 மாலுமிகள் காணாமல் போயினர். இந்நிலையில் காணாமல் போன 5 மாலுமிகளும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
72 மணி நேரத்திற்கும் மேலாக காணாமல் போன் மாலுமிகளைத் மீட்புப் பணியாளர்கள் தேடியபோதும் அவர்களைக் கண்டறிய முடியவில்லை என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.