Wednesday 24th of April 2024 04:55:57 AM GMT

LANGUAGE - TAMIL
-
தலிபான்களின் முற்றுகைக்குள் பஞ்ஷீர்;  எதிர்ப்பு போராளிகளுக்குப் பின்னடைவு!

தலிபான்களின் முற்றுகைக்குள் பஞ்ஷீர்; எதிர்ப்பு போராளிகளுக்குப் பின்னடைவு!


ஆப்கானிஸ்தான் - தலைநகர் காபூலுக்கு அருகே பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களிடம் சரணடைய மறுத்து சண்டையிட்டுவரும் பஞ்ஷீர் போராளிகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த 15-ஆம் திகதி முழுமையாகக் கைப்பற்றினர். அத்துடன், ஆகஸ்ட் 31-ஆம் திகதி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறிவிட்டன.

இந்நிலையில் பஞ்ஷீரைக் கைப்பற்றும் நோக்கில் தலிபான்கள் கடும் சண்டையிட்டு வருகின்றனர். பஞ்ஷீர் பள்ளத்தாக்கு தலிபான்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுடனான சண்டையில் எதிர்ப்புக்குழுவினர் பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போரில் பலத்த சேதம் ஏற்பட்டதையடுத்து போரை நிறுத்திக்கொள்வதாக எதிர்ப்புக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதேநேரம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், பஞ்ஷீரில் இருந்து தலிபான்கள் வெளியேற வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களால் பேரழிவு ஏற்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐ.நா.விடம் ஆப்கானிஸ்தான் முன்னார் துணை ஜனாதிபதி அமருல்லா சலே வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து ஐ.நா., செஞ்சிலுவை சங்கம், செம்பிறை சங்கம் ஆகியவற்றுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பஞ்ஷீர் பகுதியை தலிபான்கள் முற்றுகையிட்டு, பொருளாதாரப் போக்குவரத்து மற்றும் தகவல்தொடா்பைத் துண்டித்துள்ளனா்.

இதன் காரணமாக, பஞ்ஷீர் மாகாணம் மற்றும் பாக்லன் மாகாணத்தின் 3 மாகாணங்களில் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

அந்தப் பகுதிகளில் பேரழிவு ஏற்படுவதை ஐ.நா. தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்களையும், புலம் பெயா்ந்து வந்த ஆயிரக்கணக்கானவா்களையும் அழிவிலிருந்து பாதுகாக்க ஐ.நா. முன்வர வேண்டும். இந்தப் பகுதியில் பேச்சுவாா்த்தை மூலம் அரசியல் தீா்வு காண வேண்டுமென்று தலிபான்களிடம் ஐ.நா. வலியுறுத்த வேண்டும்.

பெண்கள், குழந்தைகள், வயதானவா்கள், காபூலில் இருந்து பஞ்ஷீருக்குத் தப்பி வந்த 10 ஆயிரம் போ் என சுமாா் 2.5 இலட்சம் போ் மிக ஆபத்தான சூழலை எதிா்கொண்டுள்ளனா்.

இந்த விவகாரத்தை அலட்சியப்படுத்தினால், பட்டினிச் சாவிலிருந்தும் தலிபான்களால் படுகொலை செய்யப்படும் அபாயத்திலிருந்தும் அவா்களைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்று அந்தக் கடிதத்தில் அமருல்லா சலே எச்சரித்துள்ளாா்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE