ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு விரைவில் நிறுவப்படும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படங்கள் வெளியேறிய நிலையில், அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு விரைவில் அமைக்கப்படும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இன்று அறிவித்துள்ளார். எனினும் சரியான திகதியை இப்போது கூற முடியாது. ஆனால், மிக விரைவில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து தயார்படுத்தல்களையும் மேற்கொண்டு வருகிறோம் எனவும் அவா் தெரிவித்தார்.
இதேவேளை, நாங்கள் முற்றிலும் சுதந்திரமான ஆப்கானிஸ்தானில் வாழ்கிறோம். புதிய அரசுக்காக காத்திருக்கிறோம் என தலிபான் முக்கியஸ்தர்களில் ஒருவரான அனாமுல்லா சமங்கனி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். அரசை அமைத்து பொதுத்துறை நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும் என ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.