மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பிரதேசத்திற்கு உட்பட்ட வேலுப் பகுதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியிருந்த வயோதிபப் பெண் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணும் வீட்டாரும் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் சுகாதாரத் தரப்பினரால் வீடு ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த வீட்டிலிருந்த 90 வயதுடைய ஆறுமுகம் நேசம்மா என்ற வயோதிப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 03 பேர் உயிரிழந்திருந்தாக இன்று காலை ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு