உலகிலேயே முதல் நாடாக 02 முதல் 11 வயது வரையான குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா தொடங்கியுள்ளது.
கியூபாவில் வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் பாடசாலைகள் படிப்படியாக திறக்கப்படும் என்றும் அதற்கு முன்னர் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தடுப்பூசி போட எதிர்பார்த்துள்ளதாகவும் கியூபா அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா அரசு தொடங்கியுள்ளது.
கியூபாவிலுள்ள சியன்பியூகோஸ் பகுதியில் முதன்முதலாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் கியூபாவில் போடப்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கும் பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் பல நாடுகள் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளையும் ஆரம்பித்துள்ளன. எனினும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் இதுவரை எந்தவொரு நாட்டிலும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் உலகில் முதல் முதன்முறையாக 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை கியூபா ஆரம்பித்துள்ளது.
அனைத்து சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட்ட பின்னர் ஒக்டோபர், நவம்பரில் பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் கியூபா அரசு அறிவித்துள்ளது.