மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு தாண்டியடி பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் அண்ணன், தம்பி இருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (05) இரவு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தாண்டியடி எரிபொருள் நிலையத்தில் தமது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு வீடு திரும்பியபோதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தபட்டு முகத்தில் பல தையல்களுடன் அனுமதிக்கபட்டுள்ளாதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் வெளியாகவில்லை.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு