இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இன்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
சரித் அசலன்க 47 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் தென் ஆபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் 38 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
204 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெத்தாடிய தென் ஆபிரிக்க அணி 30 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
இதன் அடிப்படையில், தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை, இலங்கை அணி 2 - 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை