Thursday 25th of April 2024 03:58:48 PM GMT

LANGUAGE - TAMIL
-
பின் தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை  பிரித்து மருத்துவர்கள் சாதனை!

பின் தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரித்து மருத்துவர்கள் சாதனை!


தலை ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் இணைந்து சாதனை படைத்துள்ளனர்.

2020- ஆகஸ்ட்டில் பின் தலை ஒட்டிப் பிறந்த இந்தக் குழந்தைகள் இந்த அறுவைச் சிகிச்சையின் பின்னர் முதன்முறையாக ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

பீர்ஷெபா நகரில் உள்ள சொரோகா மருத்துவ மையத்தில் கடந்த வாரம் சுமார் 12 மணி நேர அறுவைச் சிகிச்சையின் பின்னர் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களும் பிரிக்கப்பட்டனர்.

இந்த கடினமாக மற்றும் ஆபத்தான அறுவைச் சிகிச்சையில் இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டனர்.

அறுவைச் சிகிச்சையின் பின்னர் ஒட்டிப் பிறந்த இரட்டைச் சிறுமிகளும் நன்றாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போது இரண்டு குழந்தைகளும் நன்றாக சுவாசிக்கின்றன. ஆகாரங்களை எடுத்தக்கொள்கின்றன என சொரோகா மருத்துவ மையத்தி பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைப் பிரிவு தலைவர் எல்டாட் சில்பர்ஸ்டீன் தெரிவித்தார்.

ஒட்டிப் பிறந்தவர்களை பிரிக்கும் இவ்வாறான கடினமான மற்றும் ஆபத்தான 20 அறுவைச் சிகிச்சைகள் உலகளவில் நடந்துள்ளன. எனினும் இஸ்ரேலில் இவ்வாறான முதல் அறுவைச் சிகிச்சை இதுவாகும்.

ஆகஸ்ட் 2020 இல் பிறந்த பிரிக்கப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகளும் எதிர்காலத்தில் முற்றிலும் இயல்பாக இருப்பார்கள் எனவும் மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE