Friday 29th of March 2024 05:17:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
காரைநகர் திருமண நிகழ்வில் பங்குகொண்ட சிறார்கள் 13 பேர் உட்பட  34 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

காரைநகர் திருமண நிகழ்வில் பங்குகொண்ட சிறார்கள் 13 பேர் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


யாழ்ப்பாணம் காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூறுக்கும் அதிகமானோர் பங்குகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் குறித்த தொற்றாளர்கள் யார் என்று, காரைநகர் சுகாதாரத் தரப்பினரை தொடர்புகொண்டு அருவியின் பிராந்திய செய்யாளர் கேட்டபோது திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காண்பட்டுள்ளதாக அவர்கள் உறுதிப்படுத்தினர்.

காரைநகரைச் சேர்ந்த 81 பேரின் பிசிஆர் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 05, 07, 08, 09, 10, 11, 12, 13, 14, 15வயதுடைய 13 சிறார்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை தனிமைப்படுத்தி அவர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்டவேளை வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர் உட்பட்டவர்களை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் 03 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE