முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக வெடிபொருள் வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்த வெடிபொருளையும் கைதான நபரையும் கடற்படையினர் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட வெடிபொருளே வெடித்துச் சிதறியுள்ளதாக முல்லைத்தீவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், முல்லைத்தீவு