தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை மீறும் வகையில் செயற்படும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக சுகாதார துறையினரால் குற்றஞ்சாட்டப்பட்டள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா வேரியன், அல்பா வேரியன் அடையாளப்படுத்தப்பட்டுவரும் நிலையில் பொதுமக்களை வீடுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார துறையினரால் தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் அதனை கவனத்தில் கொள்ளாத நிலையிலேயே செயற்பட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இந்த நேரத்தில் தேவையற்ற வகையில் நடமாடுபவர்களை கண்டறியும் வகையிலான விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரும் மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி நடமாடியவர்கள் கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டு திருப்பியனுப்பிவைக்கப்பட்டனர்.
ஊரடங்கு சட்டத்தினை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கடுமையான எச்சரிக்கைசெய்யப்பட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் அதனை மீறிச்செயற்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டன.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு