கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை வட்டார வன அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 45 தேக்கு மர குற்றிகளும் அதனை ஏற்றிவந்த வாகனமும் சந்தேக நபர் ஒருவரும் புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் என் நடேசன் தெரிவித்தார்.
வாழைச்சேனை வட்டார வன பகுதியில் சட்ட விரோத மரக் கடத்தல் இடம் பெறுவதை தடுக்கும் நோக்கில் வட்டார வன உத்தியோகத்தர் என் நடேசனின் வழிகாட்டலில் தொப்பிகல பகுதி வன உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.கியாஸின் தலைமையிலான பகுதி வன உத்தியோகத்தர் எஸ்.சிவகுமார் வனவிரிவாக்கல் உத்தியோகத்தர் எஸ்.எம். சபீக், வன வெளிக்கள உத்தியோகத்தர்களான டி.என.; ஸ்ரீவர்த்தன மற்றும் எச்.எம்.ஐ.குமார ஆகியோர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது புலியபாய்ந்தகல் பாலத்திற்கு அருகில் வைத்து குறித்த மரங்களும் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நான்கு அடி தொடக்கம் பத்து அடி வரையிலான நீளமுடைய 45 தேக்கு மர குற்றிகளும் டிப்பர் வாகனமும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் இவருடன் தொடர்புடைய வேறு யாராவது இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் தெரிவித்தார்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு