முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்குச் சென்றிருக்கின்றார்.
அங்கு அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து நோயாளர் காவு வண்டிமூலம் அவர் கோப்பாய் கொரோனா வைத்தியாசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வட மாகாணம், யாழ்ப்பாணம்