மட்டக்களப்பு மாவட்டம் ஆரைம்பதி வாவியில் மீன்பிடித்தக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
ஆரையம்பதி 3 பிரிவு திருநீற்றுக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நவரத்தினம் துசாந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வழமைப்போல மீன்பிடிக்க சம்பவ தினமான நேற்று சென்றவர் தோணியில் இருந்து தவறி வாவியில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு