யாழ் மாவட்டத்தினைச் சேர்ந்த 04 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மூன்று பேருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த குழந்தைகளுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் விடுதியிலக்கம் 23 A இல் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 02 வயது ஆண்குழந்தை,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 01 இல் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதும் 06 மாதமும் நிரம்பிய பெண் குழந்தை,
யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள 03வயதும் 08 மாதமும் நிரம்பிய ஆண்குழந்தை ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை,
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 06 வயதுச் சிறுவன், 08 வயதுச் சிறுமி, 10 வயதுச் சிறுமி ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, யாழ்ப்பாணம்