Friday 29th of March 2024 02:22:38 AM GMT

LANGUAGE - TAMIL
-
வீட்டிலிருந்து காணாமல்போன பெண் ஆற்றிலிருந்து சடலமாக இன்று மீட்பு!

வீட்டிலிருந்து காணாமல்போன பெண் ஆற்றிலிருந்து சடலமாக இன்று மீட்பு!


நாவலப்பிட்டி, டெலி வீதி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் வீட்டிலிருந்து காணாமல்போயிருந்த நிலையில், அவரது சடலம் மகாவலி ஆற்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த எங்கலின் நாரங்கல (வயது 84) என்ற வயோதிபப் பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரைக் கடந்த 10ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவரது உறவினர்கள் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மகாவலி ஆற்றில் பெண்ணின் சடலம் மிதக்கின்றது எனப் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கியத் தகவலுக்கு அமைய சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE