Saturday 20th of April 2024 02:50:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் உட்பட மூவர் கைது!

விபச்சார விடுதி முற்றுகை! இரு பெண்கள் உட்பட மூவர் கைது!


தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவத்துகொட பிரதேசத்தில், விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பெண்கள் இருவர் உட்பட மூவரைத் தலங்கம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

விபச்சார விடுதியை நடத்தி வந்தவர் மற்றும் விபச்சார விடுதியை நடத்திச் செல்வதற்கு உதவிய பெண்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, சீதுவ மற்றும் தங்கெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42, 46, 39 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE