தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலின் தொடக்க நாள் அஞ்சலி நிகழ்வுகள் கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உருவப்படத்துக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தினார் என்று அவரின் ஊடகப் பிரிவினால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.