யாழ்.மாவட்டத்தில் உயிரிழந்த இருவருக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்திசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ஒரு வயதும் 03 மாதமும் நிரம்பிய பெண்குழந்தையான மயூரன் தனுசியா,
உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஊடாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட செல்லத்துரை நகுலேஸ்வரன் (வயது 51) ஆகிய இருவருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), வட மாகாணம், யாழ்ப்பாணம், கரவெட்டி