Wednesday 24th of April 2024 03:04:41 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழில் குழந்தை பிரசவித்து ஒருவாரத்தில் தாயார் கொரோனாவால் மரணம்!

யாழில் குழந்தை பிரசவித்து ஒருவாரத்தில் தாயார் கொரோனாவால் மரணம்!


யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த ஒரு வாரத்தில் இளம் தாய் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடையவரும் யாழ்ப்பாணம் அஞ்சல் சேவை பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியரும், அஞ்சல் சேவை உத்தியோகத்தருமான சதீஸ்குமார் அபிமினி என்ற தாயாரே நேற்று (14) உயிரிழந்துள்ளார்.

“செப்ரெம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் குறித்த பெண்மணி சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கோவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயாருக்கு தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்துள்ளார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE