தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாற்று காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்றையதினம்( 17) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 75 லிட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் தர்மபுரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தர்மபுரபோலீஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி