சுகாதார துறையை சேர்ந்த அனைவரையும் கௌரவிக்கும் முகமாகவும், உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும் கொழும்பு தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இவ்வாறு மின்விளக்குகள் ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.