வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த 53 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்