Thursday 28th of March 2024 08:23:39 AM GMT

LANGUAGE - TAMIL
-
புதுக்குடியிருப்பு MOH இல் 28 பேர் உட்பட முல்லை மாவட்டத்தில் இன்று 36 பேருக்கு தொற்றுறுதி!

புதுக்குடியிருப்பு MOH இல் 28 பேர் உட்பட முல்லை மாவட்டத்தில் இன்று 36 பேருக்கு தொற்றுறுதி!


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.

அவற்றின் அடிப்படையில்,

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேர்,

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகப் பின்பற்றாமையே தொடர்ந்தும் கொரோனாப் பரவல் அதிகரித்துவருவதற்கு காரணம் என்று சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், மல்லாவி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE