யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேர் உட்பட வடக்கில் மேலும் 110 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்றைய தினம் (செப்-17) 330 பேரின் மாதிரகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் இவ்வாறு 110 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஆய்வுகூட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 50 பேர்
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 28 பேர்
யாழ். போதனா வைத்தியசாலையில் - 08 பேர்
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் - 07 பேர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - 04 பேர்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர்
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் - ஒருவர்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் - ஒருவர்
நொதோர்ன் வைத்தியசாலையில் - ஒருவர்
செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் - ஒருவர்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் - ஒருவர்
இரணைமடு விமனப்படை முகாமில் - 03 பேர்
மன்னார் கடற்படை முகாமில் - ஒருவர்
என 110 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மல்லாவி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, வவுனியா