Wednesday 24th of April 2024 10:35:01 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் அரசே பொறுப்பு - எதிரணி எம்.பி. அலவத்துவல!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் அரசே பொறுப்பு - எதிரணி எம்.பி. அலவத்துவல!


"ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை அன்று இலங்கை இழந்தபோது, பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். அவ்வாறான நிலைமை மீண்டும் வந்தால், அரசு பொறுப்பேற்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகின்றது. அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் பரிவர்த்தனைகளை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்கின்றது.

அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டுவருவதாகக் கூறுகின்றது. எனினும், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகின்றது.

இலங்கை முன்னேற வேண்டுமானால், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புணர்வுடன் பதிலளிக்க வேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE