Friday 19th of April 2024 09:11:45 PM GMT

LANGUAGE - TAMIL
.
மட்டு போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடரும் காட்டு யானை தொல்லையால் மக்களுக்கு பொருளாதார பாதிப்பு!

மட்டு போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடரும் காட்டு யானை தொல்லையால் மக்களுக்கு பொருளாதார பாதிப்பு!


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடர்ச்சியாக காட்டு யானையின் தொல்லையினால் மக்கள் அவதி நிலைக்கு உள்ளாவதுடன் பொருளாதாரத்தினையும் இழக்கும் நிலையேற்பட்டுவருகின்றது.

இன்று போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 37ஆம் கிராமம், நெல்லிக்காடு ஆகிய பகுதிகளில் காட்டு யானையினால் மக்களின் வாழ்வாதார தொழிலாகிய மரவள்ளி சேனையினையும் தென்னைகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடர்ச்சியாக காட்டுயானையினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.அத்தோடு மக்களின் குடி மனைகளையும் உடைப்பதுடன் மக்களின் உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுவருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அதிகாரிகள் பலதடவைகள் வந்து பார்வையிட்டுயிட்டு செல்கின்றபோதிலும் எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதில்லையெனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

காட்டுயானையில் இருந்து மக்களையும் மக்களின் வீடுகளையும் மக்களின் வாழ்வாதார தொழிலாக விவசாயம் சேனைப்பயிர்ச்செய்கை போன்றவற்றையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கையெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE