ஐ.நா. பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியூயோர்க் சென்றடைந்தார்.
ஐ.நா. பொதுச் சபை அமர்வில் 22 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை தொடர்பான விடயங்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளதாக இன்று சற்றுமுன்னர் நியூயோர்க் சென்றடைந்த புகைப்படங்களுடன் தனது ருவிட்டரில் ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.
அத்துடன், பல நாடுகளின் தலைவர்களுடன் பயனுள்ள இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.