தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களது மொத்த எண்ணிக்கை 75 ஆயிரத்தை கடந்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில், இன்று அதிகாலை 6.00 மணி வரையான கடந்த 24 மணித்தியாலத்தில் 551 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களது எண்ணிக்கை 75,058 ஆக அதிகரித்துள்ளது.
மேல் மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 சோதனைச்சாவடிகளில் 1,684 வாகனங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.
இதன்போது அனுமதியின்றி பயணித்த 164 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதோடு 37 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை