இலங்கையில் நேற்று சுமார் 51 நாட்களில் பின்னர் குறைந்தளவு தொற்று நோயாளர்கள் மற்றும் 43 நாட்களில் பின்னர் குறைந்தது கொரோனா மரணங்கள் பதிவாகின.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, இலங்கையின் கடந்த வாரத்தில் தினசரி சராசரியாக 10,300 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. பி.சி.ஆர். பரிசோதனைகளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் வீதம் 25% ஆகக் குறைந்துள்ளது. செப்டம்பர் ஆரம்பத்தில் இது 35% ஆக இருந்தது.
இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொற்று நோயாளர் தொகை 502,758 -ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் 431,036 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 12,022 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு வரையான தரவுகளின்படி 59,700 பேர் தொற்று நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, 43 நாட்களில் பின்னர் குறைந்தளவாக நேற்று 84 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன.
இதனுடன், தொடர்ச்சியாக 7 வது நாளாக இலங்கையில் 150 க்கும் குறைவான கொவிட் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.
இம்மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வைரையான 18 நாட்களில் நாட்டில் 2,620 பேர் கொரோனாவால் இறந்துள்ளர்.
இதுவரை கொரோனாவால் உயிரிழச்த 12,022 போரில் 6,730 க்கும் மேற்பட்டோர் ஆண்களாவர். 5,270 க்கும் மேற்பட்ட பெண்கள் இறந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 76.04% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். 30 முதல் 59 வயது வரையான 22.84 வீதமானவர்களும் 30 வயதுக்குபட்பட்டவர்கள் மத்தியில் 1.12% மரணங்களும் பதிவாகியுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை