Friday 19th of April 2024 03:03:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாளை முதல் வடக்கில் 20 முதல் 29 வயது வரையானவர்களுக்கு தடுப்பூசி!

நாளை முதல் வடக்கில் 20 முதல் 29 வயது வரையானவர்களுக்கு தடுப்பூசி!


வட மாகாணத்தில் 20 முதல் 29 வயது வரையானவர்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதற்காக மாகாணத்துக்கு 131,000 தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்துக்கு 80,000 தடுப்பூசிகளும், வவுனியாவுக்கு 18,500, கிளிநொச்சிக்கு 15,000 தடுப்பூசிகளும் பகிரப்பட்டுள்ளன.

அதேபோன்று முல்லைத்தீவுக்கு 13,000 மற்றும் மன்னார் மாவட்டத்துக்கு 4,500 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு நேற்று சுமார் 40 இலட்சம் கினோபார்ம் தடுப்பூசிகள் வந்து சேர்ந்த நிலையில் 20 முதல் 29 வயது பிரிவினருக்கான தடுப்பூசிப் பணிகள் துரிதமாக இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE