கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் ஒரு வயதுப் பெண்குழந்தைகள் இரண்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கர்ப்பவதி ஒருவர் உட்பட வடக்கு மாகாணத்தில் இன்று 80 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 56 பேர் யாழ்.மாவட்டத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 294 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவற்றின் அடிப்படையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் 56
சிறைச்சாலையில் 34 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 பேர்,
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் (10ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பவதி)
சென்ரல் நேர்சிங்க ஹோமில் ஒருவர்,
வவுனியா மாவட்டத்தில் 14 பேர்
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேர்
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 04 பேர்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியாசலையில் 02 பேர்,
வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர் (ஒரு வயதுப் பெண் குழந்தை)
வெள்ளாங்குளம் விமானப்படை முகாமில் ஒருவர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், (ஒருவர் ஒருவயது நிரம்பிய பெண் குழந்தை)
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்