வடஇலங்கைச் சங்கீத சபையின் முன்னாள் செயலாளரும் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி வித்தியாலயத்தின் முன்னாள் அதிபருமான மு.அருளையா அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.
அதிபர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக வடஇலங்கைச் சங்கீத சபையில் அர்ப்பணிப்பும்; வினைத்திறனும் கொண்ட செயலாளராகப் பணியாற்றியவர் என்பதும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தெல்லிப்பளை அருள்மிகு துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாக சபையின் செயலாளராகவும் உறுப்பினராகவும் அரும்பணியாற்றியவர் ஆவார்.